பிரம்டன் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: சந்தேகநபருக்கு பொலிஸார் வலைவீச்சு
பிரம்டன் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகநபரை பொலிஸார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
குறித்த சந்தேக நபர் கடைசியாக டெசேர்ட் சான்ட் டிறைவ் மற்றும் றெட்லஸ்னேக் வீதி ஆகிய பகுதியில் கறுப்பு நிற வாகனம் ஒன்றை செலுத்திச் சென்றதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலதிக தகவல் எதனையும் வெளியிடாத பொலிஸார், சந்தேகநபர் குறித்து தகவல் தெரிந்தவர்கள் தம்மை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
நேற்று (வியாழக்கிழமை) இரவூ.30 மணியளவில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், 30 வயது மதிக்கதக்க ஆணொருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.